உனக்காகவும்
எனக்காகவும்
பெய்கிறது மழை..
ஏனோ நனைகிறது...
வெயில்...
வெப்பம் படந்ததாலோ
உடல் நடுங்குகிறது...
குளிர்தானே வெப்பப்படுத்தியது...
புயல்வந்தென்னை
புழுவைப்போல்
துடிக்கச்செய்தது...
நான் துடிப்பது தெறிந்தும்
நாணத்தைவீசினாய் ....
நான் தொலைந்து விடாதபடிக்கு
அணைகட்டி அணைகட்டி
என் உள்ளப் பெருக்கை
தடுத்துவைத்தேன் ...
நீயோ நெருங்கி நெருங்கி
என்னை நெருக்கி நெருக்கி...
ஆற்றோடு அணுப்பிவிடவே
அணுமானித்தாய் ..
ஆரேழு நொடிகளில்
ஆயிரம் கோடி சிந்தனை...
அத்துனையும் சிதரித்தான்
போனது ...
என் இதழ் உன்
நெற்றிதொட நீ
நிமிடங்களை கழித்த
பொழுதுகள் ...
காரணமே இல்லாமல்
பகல் பொழுதிலும்
பளிச்சிட்ட மின்னல்...
பட படவென சில நொடியில்
உயிர்உலுக்க ...
இதமான இடியாய்
நீ என் இதயத்தில் மோத...
எண்ணற்ற கோடிமின்னல்களை
என் ஒவ்வொரு
அணுக்களிலும்
ஒன்ரொன்றாக
செலுத்தி
சிலிர்க வைத்தாய் ...
சிந்தையறியா
சிலகோடி சுகம்...
சிற்றின்பத்தில் காணத
ஓர் அற்புதம் ....
உருமாரிய
ஒவ்வொரு கணமும்
காமப் போர்வை
போர்த்திய பொழுதும்...
கலங்கமற்றதாய் நீ
கொண்ட நம்பிக்கையை...
நான் இரக்கமின்றி
கிழித்தெறிவேனோ ...?
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment