Wednesday, March 16, 2011

இது காதல்க் கொடுமை அல்ல...

என்
உடல் சுடுகிறது....
கண்கள் எரிகிறது....
மூச்சுகாற்றுகூட
முழுவதும்
செல்லாமல்
தினறுகிறது ...
கைகால்களில்
எல்லாம்
வலி படர்கிறது...
அசதியாய் உணர்கிறேன்...
தூங்க மனம்
துடிக்கிறது...
துளித்துளியாய்த்தான்
நேரம் கிடைக்கிறது ...
கண் இமைகளில்
கயிறுகட்டி
கல்லைத் தொங்கவிட்டதுபோல்
உணர்கிறேன் ...
இதயம் துடிக்கும்
போது அதன் அதிர்வை
உணரமுடிகிறது ....
நலமாய் நானிறுந்த
நேரம் நான் உனைக்கண்ட
போதுணர்ந்த
அத்துணையும்
நீ இல்லாத இந்த பொழுதில் எப்படி
சாத்தியமானது ....
ஒருவேலை...
இது
காய்சல் என்று
நினைக்கிறேன் ....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...