என்
உடல் சுடுகிறது....
கண்கள் எரிகிறது....
மூச்சுகாற்றுகூட
முழுவதும்
செல்லாமல்
தினறுகிறது ...
கைகால்களில்
எல்லாம்
வலி படர்கிறது...
அசதியாய் உணர்கிறேன்...
தூங்க மனம்
துடிக்கிறது...
துளித்துளியாய்த்தான்
நேரம் கிடைக்கிறது ...
கண் இமைகளில்
கயிறுகட்டி
கல்லைத் தொங்கவிட்டதுபோல்
உணர்கிறேன் ...
இதயம் துடிக்கும்
போது அதன் அதிர்வை
உணரமுடிகிறது ....
நலமாய் நானிறுந்த
நேரம் நான் உனைக்கண்ட
போதுணர்ந்த
அத்துணையும்
நீ இல்லாத இந்த பொழுதில் எப்படி
சாத்தியமானது ....
ஒருவேலை...
இது
காய்சல் என்று
நினைக்கிறேன் ....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment