Sunday, April 3, 2011

நீ....நான்...அவள்...


நீ வளர்வதும்
தேய்வதுமாய்
இருக்கிறாய்...

நான் வளர்ப்பதும்
தேய்வதுமாய்
இருக்கிறேன்...

அவள் சிதைப்பதும்
வதைப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஒளிர்வதும்
ஒளிவதுமாய்
இருக்கிறாய்...

நான் ஒளிப்பதும்
ஒழிவதுமாய்
இருக்கிறேன்...

அவள் ஒளிவதும்
ஒழிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஓர் பொழுது
உட்கொள்வதும்
ஓர் பொழுது
உமிழ்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
ஒவ்வொரு
பொழுதிலும்
உட்கொள்ளவும்
முடியாமல்
உமிழவும்
முடியாமல்
தவிக்கிறேன்...

அவள்
கைகளை கொண்டு
நெறிப்பதும்...
விரகளை கொண்டு
இருக்குவதுமாய்
இருக்கிறாள்...

நீ இரவில்
வருவதும்
பகலில்
செல்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
உனது ஜனனத்திலும்
மரணத்திலும்
விழித்தே
இருக்கிறேன்....

அவள்
என் விழிகளை
அறுப்பதும்
இமைகளை
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ குளிர்வதும்
மிளிர்வதுமாய்
இருக்கிறாய்....

நான் வியர்பதும்
துடிப்பதுமாய்
இருக்கிறேன்...

அவள் தகிப்பதும்
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ என்னில் இருந்து
வேறுபட்டும்
மாறுபட்டும்
இருக்கிறாய்...

நான்
வேர்துளைத்த
வேந்தனாய்
மாரருந்து
இருக்கிறேன்...

அவள்
என்னில்
இருந்து
வேரு விட்டு
மார்துளைத்து
மரமாகிப்போனாள்...

ஆம்
நீ
நிலவாகிப் போனாய்...
நான்
நிழலாகிப் போனேன்...
அவள்
நிஜமாகிப் போனாள்...

2 comments:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...