Saturday, December 12, 2009

பிரியும் தருண நினைவுகள்



தோளோடு தோல் கோர்த்து
துணையாக நடந்தோமே...
மார்போடு தலை சாய்த்து
எதிகாலம் பகிர்நதோமே
கனமாந கஷ்டங்களை
காலடியில் புதைத்தோமே
நட்புடனே நாம் பழகி
பகைமையை எரித்தொமே..
ஒற்றுமையாய் நாமிருந்து
வேற்றுமைஎன்னும் விருச்சதின்
வேறேடுது எறிந்தொமே
காயங்கள் பட்டபோதும்
கலங்காமல் நின்றோமே..
கையோடு கை கோர்த்து
கதை பேசி கடந்துசென்ற
காலங்கள் கண்முன்னே
காணாமல் போகுதடா-தோழா..
தீ என்னை சுட்ட போதும்
கலங்கவில்லை என் கண்கள்
தீயைக் கூட எரித்துவிடும்
நம் பிரிவு வந்தபோது
கண்ணூரில் கங்கைநதி
கடல்நீரின் கரிப்போடு
காற்றாட்டு வெள்ளமாக
கசிகிறது காட்டருவி...
உடலலெல்லாம் தழுதழுக்க
குரல்ளெல்லாம் கனகனக்க
கையிரண்டு சேர்ந்துவிட்டு
பிரிகின்ராத் தருணத்தில்
விரல் நுனியில் பிரிவு வந்து
கூர் வாழாள் போரிட்டு
வெட்டி எறிந்த நகமொன்று
விண்வெளியில் பிறையாக
வழம் வரும் ஓரிருநாள்
என்றாவது நீ ஒரு நாள்
உன் வீட்டு முற்றத்தில்
தனித்திருக்கும் தருணத்தில்
அழியாத நம் நினைவை
ஆகாயத்தில் அலசிப்பார்
கருவானின் மேகங்கள்
கானமாய் களைந்து செல்ல...
விண்மீன்கள் படையோடு
பிறை நடுவே நாமிருப்போம்
பிரியாமல் வாழ்ந்திருப்போம்........

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...