Monday, July 1, 2013

நான் கொண்ட நீ......


இடமும் வளமும் நீ... 
மேலும் கீழும் நீ....
முன்னும் பின்னும் நீ...
அகமும் புறமும் நீ...
அல்லும்  பகலும் நீ...
அசையா ஆற்றலும் நீ....
காரிருள் இரவும் நீ....
கடுங்குளிர் நிலவும் நீ...
தீ எனத் தகிப்பும் நீ...
தீராத தாகம் நீ...
விண்வெளி முடிவும் நீ....
விழகாத நிழலும் நீ....
உருமாறும் உடலும் நீ....
உருவில்லா உயிரும் நீ...
உணராதப் பொருளும் நீ...
உவகையில் வியப்பும் நீ.
ஓடிவரும் குழந்தை நீ...
ஓயாத பேரலை நீ....
அழும் பொது அருவி நீ...
ஆகாயப் புன்னகை நீ...
அழகான வெண்பனி நீ...
ஆழிச் சுழலும் நீ....
அமிழ்தத்தின்  உட்பொருள் நீ...
எனை ஆழும் ஏகாந்தம் நீ....
எத்தனைப் பிறப்பிலும் 
என்னுயிர் நீ...
அதனை யுகத்திலும் 
உன்னை ஆழ்பவன் நான்.......
~*~

1 comment:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...